கொடைக்கானலுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க மக்கள் கோரிக்கை!

கொடைக்கானலுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக இ-…

கொடைக்கானலுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக இ- பாஸ் பெற்று செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை தடைபட்டதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கொடைக்கானலுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.