35.8 C
Chennai
June 28, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா Fact Check Stories

மதரீதியாக வாக்குகளை பிரிக்க கர்நாடக காங்கிரஸ் சதி? என்று கூறி போலியாக கடிதம் ஒன்று பரப்பப்பட்டது அம்பலம்!

This News Fact Checked by Newschecker

இந்து வாக்குகளை பிரிக்க கர்நாடக காங்கிரஸ் சதி? என்று கூறி போலி கடிதம் பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2017ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான எம்பி பாட்டீல் எழுதிய கடிதம் என்று கூறி, போலியான கடிதம் ஒன்று தேர்தல் நேரத்தில் சமூக வலைதள பக்கங்களில் பரவியது.

அதில், குளோபல் கிறிஸ்டியன் கவுன்சில் மற்றும் உலக இஸ்லாமிய அமைப்பின் உதவியுடன் 2018ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, “இந்துக்களை பிளவுபடுத்தி, முஸ்லிம்-கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உத்தியை” காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதம் தற்போது மீண்டும் சமூக வலைதள பக்கங்களில் வைரலானது. இது சமீபத்தில் முடிவடைந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கான உக்தியாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் வெற்றி பெறவில்லை. கடந்த தேர்தல்களில் பாஜக பெற்ற பெரிய வெற்றியை அக்கட்சி தற்போது பெற முடியவில்லை. பாஜக வென்ற பல தொகுதிகளை காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியுள்ளன. காங்கிரஸ் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 52 தொகுதிகளை மட்டுமே பெற்ற நிலையில், இந்த தெர்தலில் 99 இடங்களை கைப்பற்றியது.

X தள பதிவை இங்கே காணலாம்.

உண்மை

நியூஸ்செக்கர் தரப்பில் “எம்பி பாட்டீல் கடிதம் சோனியா காந்தி கர்நாடகா 2018” என்ற முக்கிய தேடலை மேற்கொண்டது. இது ஏப்ரல் 16, 2019 தேதியிட்ட இந்த நியூஸ்மினிட் செய்திக்கு நம்மை அழைத்துச் சென்றது , இது “கர்நாடக அமைச்சர் ஒருவரின் சதித்திட்டம்” என்ற போலி கடிதத்தை பாஜக ட்வீட் செய்ததாகக் கூறுகிறது.

“கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தனி லிங்காயத் மதப் பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, ​​2018-ல் வாட்ஸ்அப்பில் அந்தக் கடிதம் பரவியது. இது முதலில் போலி செய்தி இணையதளமான PostCardNews மூலம் வெளியிடப்பட்டது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு கடைப்பிடிக்க வேண்டிய வியூகம் குறித்து, ‘குளோபல் கிறிஸ்டியன் கவுன்சில்’ மற்றும் ‘உலக இஸ்லாமிய அமைப்பு’ பிரதிநிதிகளுடன் சில அமைச்சர்கள் நடத்திய சந்திப்பு குறித்து, ‘கடிதம்’ பேசுகிறது. ஆனால் அப்படி எந்த அமைப்புகளும் இல்லை என்று கண்டறியப்பட்டது.

மேலும், அந்த கடிதம் போலியானது என்றும், பிஜாப்பூர் லிங்காயத் மாவட்ட கல்வி சங்கத்தின் (BLDEA) தலைவர் எழுதிய கடிதத்தின் நகலை மர்ம நபர்கள் ஸ்கேன் செய்து உள்ளடக்கங்களை மாற்றியதாகவும் எம்பி பாட்டீல் TNM இடம் கூறினார்.

மேலும் தேடுதலானது , ஏப்ரல் 16, 2019 தேதியிட்ட எம்பி பாட்டீல் ட்வீட் , வைரலான கடிதம் போலியானது என்பதை மீண்டும் வலியுறுத்தியது. “இந்தக் கடிதத்தை போலியாகத் தயாரித்து வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இந்த கடிதத்தின் வாயிலாக பாஜகவின் ஏமாற்றம் தெரிகிறது. மக்களின் ஆதரவை இழந்து, போலியான காகிதங்களையே முழுமையாக பாஜகவினர் நம்பியிருக்கிறார்கள்,” என்று பதிவிட்டதோடு, உண்மையான மற்றும் போலி லெட்டர்ஹெட்களின் புகைப்படங்களையும் இணைத்திருந்தார்.

கர்நாடக காங்கிரஸும் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்தது , ஏப்ரல் 16, 2019 தேதியிட்ட அந்த பதிவில், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல தயாராக இருப்பதாகக் கூறியது.

ஏப்ரல் 24, 2019 தேதியிட்ட இந்த NDTV அறிக்கையையும் நாங்கள் பார்த்தோம் , இது ஆன்லைன் செய்தி போர்ட்டலான போஸ்ட்கார்ட் நியூஸின் இணை நிறுவனர் மகேஷ் விக்ரம் ஹெக்டே தவறான கூற்றின் பேரில் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறுகிறது.இது குறித்த செய்திகளை இங்கே 1, 2 காணலாம் .

முடிவு:

பொய்யான கடிதம் பரப்பப்பட்டது அம்பலம்.

 

Note : This story was originally published by Newschecker and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading