கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு அழைப்பு விடுத்த வாட்ஸாஆப் குரூப் அட்மின் உட்பட 3 பேரைச் சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அடுத்த கணியாமூர் தனியார்ப் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி, உயிரிழந்த விவகாரத்தில், கடந்த 17-ஆம் தேதி அன்று பள்ளி முன்பு நீதி கேட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையாக மாறி கலவரத்தில் முடிந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்களைச் சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் கைது செய்து வருகிறனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்படுவதாக இளைஞர்கள் மத்தியில் வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி அதில் பல்வேறு நபர்களைச் சேர்க்கப்பட்டு கலவரத்திற்கு ஆட்களைச் சேர்க்கும் வகையில் ஈடுபட்ட ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும் என்ற வாட்ஸ் அப் குழு அட்மினானா கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் நடுத்தெருவைச் சேர்ந்த கொளஞ்சி மணி மகன் விஜயை கைது செய்துள்ளனர்.
அண்மைச் செய்தி: ‘யூடியூபிடம் கேட்கப்படும் டாப் 10 கேள்விகள் இதுதான்!’
அதே போல whatsapp குழுக்களின் லிங்க்குகளை பல்வேறு இளைஞர்களுக்கு அனுப்பி குழுவில் சேர அழைப்பு விடுத்த கச்சிராயபாளையம் அடுத்த மட்டப்பாறை ஏழுமலை மகன் துரைப்பாண்டி, வேப்பூர் அருகே காசாக்குடி கிராமம் மேற்கு தெருவைச் சேர்ந்த குமரவேல் மகன் அய்யனார் ஆகியோரை சிறப்புப் புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுடைய குழு மற்றும் அழைப்பை ஏற்று 400 பேர் இணைந்தது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.