6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் சிந்தனை, செயல்களில் திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. ஆதலால் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ள பள்ளிகல்வித்துறை அதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
அதில் பள்ளிகளில் திரைப்படத்துக்கென ஒதுக்கப்பட்ட பாடவேளைகளில் மட்டுமே படங்களை திரையிட வேண்டும் எனவும் படம் திரையிடுவதற்கு முன்பும், பின்னரும் அதுகுறித்து மாணவர்களிடத்தில் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும் எனவும் பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் எந்த படங்களை திரையிடுவது என்பது குறித்து ஒவ்வொரு மாதமும், பள்ளிகளுக்கு கல்வித்துறை விவரம் அனுப்பும் அதன் படி திரைப்படம் குறித்த விமர்சனத்தை மாணவர்கள் எழுதித் தர வேண்டியது கட்டாயம். பள்ளியளவில் சிறப்பாக விளங்கும் மாணவர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் வாய்ப்புகள் வழங்கப்படும். மேலும் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவும் அழைத்துச் செல்லப்படுவார்கள் மாணவர்களின் சிந்தனை, செயல்களில் திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.







