தமிழ்நாட்டில் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்தில், இக்குழுவின் முதல்கூட்டம் இன்று நடைபெற்றது. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உறுப்பினர்களான மருத்துவர் ரவீந்தரநாத், கல்வியாளர் ஜவஹர் நேசன், பள்ளிகல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, சட்டத்துறை செயலாளர் கோபி ரவிகுமார், மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நீட் தேர்வு தாக்கம் குறித்த உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு தேவையான பரிந்துரைகளை, இக்குழு ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கையாக அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.