‘ரன்வீர் சிங் – தீபிகா படுகோனின் மகள்’ என இணையத்தில் வைரலாகும் பதிவு உண்மையா?

This news Fact Checked by Vishvas News

Is the viral post on the internet saying 'Ranveer Singh is Deepika Padukone's daughter' true?

This news Fact Checked by Vishvas News

சமூக ஊடகங்களில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் தங்கள் மகள் துவாவின் முகத்தை வெளிப்படுத்தியதாக வைரலான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் தங்கள் மகள் துவாவின் முகத்தை வெளிப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படங்கள் கூறுகின்றன. இருப்பினும், விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில், இந்தப் புகைப்படங்கள் AI ஆல் உருவாக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டது. AI கண்டறிதல் கருவிகள் இந்தப் புகைப்படங்கள் AI-யால் உருவாக்கப்பட்டவை என்பதை உறுதிபடுத்தியது. ரன்வீரும் தீபிகாவும் ஒரு தனியார் நிகழ்ச்சியில் தங்கள் மகளை அறிமுகப்படுத்தினர், ஆனால் அங்கு புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டது.

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் ஒரு குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அவர்கள் தங்கள் மகளின் முகத்தை வெளிப்படுத்தியதாகவும், இது அவர்களின் மகள் துவாவின் படம் என்றும் அந்த பதிவு கூறுகிறது.

விஸ்வாஸ் நியூஸ் விசாரணையில், இந்தப் படங்கள் உண்மையானவை அல்ல, செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டது.

வைரலான பதிவில் என்ன இருக்கிறது?

டிசம்பர் 21 அன்று ஸ்டார் ரியல்லைஃப் என்ற ஃபேஸ்புக் பக்கம் வைரலான படங்களைப் பகிர்ந்துகொண்டு, “தீபிகா படுகோன் ரன்வீர் சிங் குழந்தை துவாவுடன் குளிர்காலத்தை அனுபவிக்கிறார்” என்று பதிவிட்டிருந்தனர்.

வைரல் பதிவின் காப்பக இணைப்பை இங்கே காணலாம்.

உண்மை சரிபார்ப்பு:

வைரலான புகைப்படங்களை ஆராய, அவற்றை உன்னிப்பாகப் பார்த்தபோது, அவற்றின் அமைப்பு மிகவும் மென்மையானது மற்றும் அவை செயற்கையானதாக தெரிந்தன.

உறுதிப்படுத்துவதற்காக AI படத்தைக் கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்தி வைரல் படங்களை ஒவ்வொன்றாகச் சரிபார்க்கப்பட்டது.

முதல் படம்

AI படத்தைக் கண்டறியும் கருவியான ஹைவ் மாடரேஷன் மூலம் இந்தப் படத்தைச் சரிபார்த்தபோது, இது இந்தப் புகைப்படம் AI-உருவாக்கப்பட்டதற்கான 99.4% நிகழ்தகவைக் காட்டியது.

இரண்டாவது படம்

AI படத்தைக் கண்டறியும் கருவியான ஹைவ் மாடரேஷன் மூலம் இந்தப் புகைப்படத்தை சரிபார்த்தபோது, இது இந்தப் புகைப்படம் AI-உருவாக்கப்பட்டதற்கான 98.8% நிகழ்தகவைக் காட்டியது.

மூன்றாவது படம்

AI படத்தைக் கண்டறியும் கருவி ஹைவ் மாடரேஷன் மூலம் சரிபார்த்தபோது, ​​இந்தப் புகைப்படம் AI ஆல் உருவாக்கப்பட்டது என்பதற்கான 99.7% நிகழ்தகவு இருப்பது கண்டறியப்பட்டது.

இதற்குப் பிறகு, ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் தங்கள் மகள் துவாவின் முகத்தை வெளிப்படுத்தினார்களா என்று முக்கிய வார்த்தைகளின் உதவியுடன் தேடியபோது, செய்தியின்படி, இருவரும் தங்கள் மகள் துவாவை ஒரு தனிப்பட்ட கூட்டத்தில் அறிமுகப்படுத்தினர். ஆனால் அந்த நேரத்தில் புகைப்படம் எடுப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டது.

இதுகுறித்து மும்பையில் பாலிவுட்டை உள்ளடக்கிய டைனிக் ஜாக்ரனின் மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா, “ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் தங்கள் மகள் துவாவை ஒரு தனியார் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினர். ஆனால் அந்த நேரத்தில் படங்களை கிளிக் செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டது. துவாவின் எந்தப் படமும் பொதுவில் வெளியிடப்படவில்லை.

இறுதியாக, பதிவைப் பகிர்ந்த பக்கத்தை ஸ்கேன் செய்தபோது, Starreallife என்ற முகநூல் பக்கத்தை 42 ஆயிரம் பேர் பின்தொடர்வது தெரியவந்தது.

முடிவு

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் தங்கள் மகள் துவாவின் முகத்தை வெளிப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படங்கள் கூறுகின்றன. இருப்பினும், விஸ்வாஸ் நியூஸ் விசாரணையில் இந்த புகைப்படங்கள் AI ஆல் உருவாக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டது. AI கண்டறிதல் கருவிகள் இந்தப் புகைப்படங்கள் AI-யால் உருவாக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தியது. ரன்வீரும் தீபிகாவும் ஒரு தனியார் நிகழ்ச்சியில் தங்கள் மகளை அறிமுகப்படுத்தினர், ஆனால் படம் எடுப்பது தடைசெய்யப்பட்டது.

Note : This story was originally published by Vishvas News and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.