‘மகா கும்பமேளா சென்று திரும்பிய பேருந்து நீர்நிலையில் கவிழ்ந்து பலர் உயிரிழப்பு’ என பரவும் பதிவு உண்மையா?

‘மகா கும்பமேளா சென்று திரும்பிய பேருந்து நீர்நிலையில் கவிழ்ந்து 10 குழந்தைகள் மற்றும் ஆண்கள் உயிரிழந்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

Is the report circulating that 'a bus returning from the Maha Kumbh Mela overturned in a water body, resulting in the death of several people' true?

This News Fact Checked by ‘AajTak

பேருந்து ஒன்று நீர்நிலையில் கவிழ்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் பேருந்தில் இருந்து இறங்கி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். மகா கும்பமேளாவுக்குச் செல்லும் இந்தப் பேருந்து நீர்நிலையில் விழுந்ததால் 10 குழந்தைகள் மற்றும் ஆண்கள் இறந்ததாக வீடியோவின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2-ம் தேதி காலை வரை பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 34 கோடிக்கும் அதிகமான மக்கள் நீராடியுள்ளனர். அதே நேரத்தில், மௌனி அமாவாசை அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பிறகு, வசந்த பஞ்சமி அன்று பிப்ரவரி 3ம் தேதி மூன்றாவது நீராடலுக்கு நிர்வாகம் மும்முரமாக தயாராகி வருகிறது.

இதற்கிடையில், ஒரு பேருந்து நீர்நிலை ஒன்றில் கவிழ்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் பேருந்தில் இருந்து இறங்கி, தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதே நேரத்தில், வடிகாலுக்கு அருகில் செல்லும் சாலையில் ஒரு பெரிய கூட்டம் உள்ளது. மேலும், மக்களை ஏற்றிச் செல்லும் பல வாகனங்கள் அங்கிருந்து செல்வதைக் காணலாம்.

மகா கும்பமேளாவுக்குச் செல்லும் இந்தப் பேருந்து வடிகாலில் விழுந்ததாகவும், இதன் விளைவாக 10 குழந்தைகள் மற்றும் ஆண்கள் இறந்ததாகவும் வீடியோவின் உள்ளே உள்ள வாசகம் கூறுகிறது.

இந்த காணொளி மகா கும்பமேளாவைச் சேர்ந்தது அல்ல, இந்தியாவிலிருந்து வந்ததும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இது நவம்பர் 2024 இல் பாகிஸ்தானின் லாகூரில் நடந்த ஒரு சம்பவத்தின் பழைய காணொளி என கண்டறியப்பட்டுள்ளது.

உண்மை சரிபார்ப்பு:

வீடியோவின் முக்கிய பிரேம்களை சரிபார்த்தபோது, ​​நவம்பர் 4, 2024 தேதியிட்ட ஒரு பேஸ்புக் பதிவு கிடைத்தது. வைரல் வீடியோவைப் பகிர்ந்து, ரைவிந்த்-ன் வளைவில் திரும்பும்போது ஒரு பேருந்து நீர்நிலையில் விழுந்ததாக உருது மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரைவிந்த் என்பது லாகூர் நகரின் ஒரு பகுதி.

இதற்குப் பிறகு, இந்த சம்பவம் குறித்த பல செய்தி அறிக்கைகள் மற்றும் யூடியூப் வீடியோக்கள் கிடைத்தன. அவர்களின் கூற்றுப்படி, வருடாந்திர தப்லீகி இஜ்திமாவில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது பயணிகள் நிறைந்த பேருந்து ரைவிந்தில் உள்ள ரோஹி வடிகாலில் விழுந்தது. இந்த சம்பவத்தில் 29 பேர் காயமடைந்தனர்.

நவம்பர் 3, 2024 அன்று இந்தப் பேருந்தில் சுமார் 70 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரய்விந்தில் மாநாடு முடிந்ததும், இந்த மக்கள் கோட் அட்டு நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். வழியில், ஒரு குறுகிய சாலையில் மற்றொரு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ​​இந்தப் பேருந்தின் சக்கரம் வழுக்கி, சாலையோரத்தில் ஓடும் வடிகாலில் விழுந்தது. விபத்துக்குப் பிறகு, சுமார் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் யாரும் இறக்கவில்லை.

சமீபத்தில், மகா கும்பமேளாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த பேருந்து நாசிக்-குஜராத் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது, இதில் 7 பேர் இறந்தனர். ஆனால் வைரலாகும் வீடியோவிற்கும் மகா கும்பமேளாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

Note : This story was originally published by ‘AajTak and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.