இசையமைப்பாளர் இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியிருப்பது, அவர்தம் அடிமனதில் இருந்து வெளிவந்த உணர்வு என தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ள தமிழிசை, கருத்து சுதந்திரம் சில கருத்துகளுக்கு மட்டுமா அல்லது சிலருக்கு மட்டும் தானா என வினவியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், இளையராஜா, தனது கருத்தை சொல்ல முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்க சொல்வோம் என ஆதரவு தெரிவித்துள்ள அவர், விழித்துக்கொள் தமிழ்நாடே என குறிப்பிட்டுள்ளார்.
அண்மைச் செய்தி: 150 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி
இதேபோல, தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ் கட்சிகள் அரசியலாக்க வேண்டாம் எனவும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் தான் பயணிப்பதாக தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு புதுச்சேரியை பற்றி என்ன தெரியும் என்றும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.