சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ‘ஓம் நமசிவாய’ என கோஷமிடுவது குற்றமா? – உண்மை என்ன?

This News Fact Checked by Telugu Post சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ஓம் நமசிவாய என்று கோஷமிடுவது தண்டனைக்குரிய குற்றம் என சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…

Is it a crime to chant 'Om Namasivaya' at the Kapaleeswarar Temple in Chennai? - What is the truth?

This News Fact Checked by Telugu Post

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ஓம் நமசிவாய என்று கோஷமிடுவது தண்டனைக்குரிய குற்றம் என சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

கார்த்திகை மாதம் என்பதால் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சிவன் கோயில்களுக்கு. சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மாதம் கார்த்திகை மாதம். இந்த மாதத்தில், அனைத்து பக்தர்களும் போலா சங்கரின் பெயரை நினைவு கூர்கின்றனர். பழங்காலத்திலிருந்தே இந்த மாதம் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ருத்ராபிஷேகங்கள், ருத்ரபூஜைகள், லட்ச பில்வதாலங்களுடன் கூடிய பூஜைகள், அம்மனுக்கு லட்சக்குமார்ச்சனைகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சென்னை, மயிலாப்பூரில் சிவன் கோயில் உள்ளது. இந்த கபாலீஸ்வரர் கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு சென்னை நகர மக்கள் கார்த்திகை மாதத்தில் வந்து செல்வார்கள். ஆனால், இந்த கோயிலை சுற்றி ஓம் நமசிவாய என்று கோஷமிடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக சமூக வலைதளங்களில் சில பதிவுகள் வைரலாகி வருகிறது.

“ஓம் நமசிவாய என்று கோயிலுக்குள், சுற்றுப்புற வீதிகளில் சத்தமாக கோஷமிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சத்தமில்லாமல் உள்ளே ஜெபிக்குமாறு இ.ஓ., மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளனர். சிலரை மிரட்டி கோயிலுக்குள் போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசாருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

உண்மைச் சரிபார்ப்பு:

வைரலாகப் பரவி வரும் இந்தக் கூற்றில் உண்மை இல்லை என்று தமிழக உண்மைச் சோதனைத் துறை வைரலான பதிவின் கீழ் கருத்துப் போட்டிருப்பது கவனிக்கப்பட்டது. அதில் “ஓம் நம சிவாய என்று கோஷமிடுவது கோயிலில் தடை செய்யப்பட்டுள்ளது என பொய்யான செய்திகள் பரப்பப்படுகிறது @CMOTamilnadu @TNDIPRNEWS” என பதிவிடப்பட்டுள்ளது.

நவம்பர் 14 அன்று, அதே உண்மைச் சரிபார்ப்புப் பக்கத்தில் உண்மையை உறுதிப்படுத்தும் வீடியோவும் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில், ஒரு பேனர் விஷயத்தில் இதெல்லாம் நடந்தது எனவும், இது ஓம் நம: சிவாய என்ற கோஷத்தைத் தடுக்கும் சம்பவம் அல்ல என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு நவம்பரில், மயிலாப்பூரில் உள்ள சாலையில் பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோயிலுக்குள் நுழைய முயன்ற சிலரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அர்த்தம் சொல்லும் வகையில் தமிழில் பதிவு போடப்பட்டது.

கோயிலை சுற்றி ஏதேனும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி கண்டுபிடிக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் எங்களுக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. எந்தக் கோயிலாவது இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்திருந்தால் அது நிச்சயம் செய்திகளில் முக்கிய இடம் பெற்றிருக்கும். எனவே வைரலான பதிவுகள் போலியானவை என்பதை உறுதி செய்யப்பட்டது. மேலும், முன்பு நடந்த வாக்குவாதத்தின் வீடியோ மீண்டும் வைரலாகி வருவதை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து, விளக்கம் பெற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாரியத்தை அணுகியபோது, அப்படி எந்த விதிகளையும் தாங்கள் கொண்டு வரவில்லை, கொண்டு வரமாட்டோம் என்று விளக்கம் அளித்தனர். கடந்த சில மாதங்களாக ஒரு காணொளி வைரலாகி வருவதாகவும், அது கடந்த ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பான காணொளி எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

முடிவு:

கோயில் குறித்து பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது காவல்துறையை அணுகி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே, வைரலான புகாரில் உண்மை இல்லை என உறுதி செய்யப்பட்டது.

Note : This story was originally published by ‘Telugu Post’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.