தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் தனிப்பெரும்பான்மை பெற்று திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது மதுரை மாநகராட்சியின் மேயர் வேட்பாளரை திமுக அறிவித்துள்ளது.
1971ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுரை மாநகராட்சியின் முதல் மேயராக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் முரட்டு பிள்ளை என செல்லமாக அழைக்கப்படும் மதுரை முத்து தேர்வானார். பின் தொடர்ச்சியாக எஸ்.கே.பாலகிருஷ்ணன், பட்டுராஜன், குழந்தைவேலு, செ.ராமச்சந்திரன், தேன்மொழி கோபிநாதன், ராஜன் செல்லப்பா என இதுவரை 7 மேயர்களை கண்டுள்ளது அந்த மாநகராட்சி. அதில் மதுரை திமுக பிரமுகரான கோபிநாதனின் மனைவி தேன்மொழி 2006ஆம் ஆண்டு முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது, திமுக கூட்டணி 80 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், மேயர் தேர்வில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற சிக்கல் நீடித்து வருந்த்து மதுரை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நிறைய பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்த நிலையில் மேயர் தேர்வில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கை சற்று ஒங்கியிருந்தது.
மாநகராட்சி உறுப்பினர்கள் விஜயமெளசுமியும், ரோகிணியும், வாசுகி சசிக்குமார், இந்திராணி, விஜயலெட்சுமி, இந்திராகாந்தி ரேசில் இருந்தனர். இந்நிலையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரான பொன்.வசந்த் மனைவியும் 57வது வார்டு உறுப்பினருமான இந்திராணியை மேயர் வேட்பாளராக அறிவித்தது திமுக, மேலும் துணை மேயரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. கட்சி மேலிடத்தில் செல்வாக்காக இருக்கும் பி.டி.ஆர் தியாகராஜன் தற்போது மதுரை அரசியலிலும் கால்பதித்தார் என்பது குறிப்பிடதக்கது. 4 மண்டலங்களை உள்ளடங்கிய மதுரை மாநகராட்சியின் மண்டல தலைவர்களை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. மேயர் மற்றும் துணை மேயர் பதவி கிடைக்காதவர்கள் மண்டல தலைவர்கள் பதவியை நோக்கி காய் நகர்த்துகின்றனர்.
– எழுத்து: மா. நிருபன் சக்கரவர்த்தி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.