ஆசிய விளையாட்டு போட்டிகளின், ஹாக்கி அரையிறுதி சுற்றில் தென்கொரிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் இன்று இந்தியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையேயான ஆண்கள் அணி ஹாக்கி போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஹாக்கி போட்டி அரையிறுதிப் போட்டி என்பதால் போட்டி தொடங்கியது முதலே மிகவும் விறுவிறுப்பாகச் சென்றது. இதனால் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. போட்டியின் முதல் கட்டத்தில் இந்திய அணி 3 கோல்கள் அடித்து வலுவான நிலையில் இருந்தது. அதன்பின் 4-2 என்ற கணக்கில் இரண்டாம் கட்டத்தில் இந்தியா முன்னிலை வகித்தது.அதன் பின்னர் மூன்றாவது கட்டத்தில் இந்திய அணி மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆனால் மூன்றாவது கட்டத்தில் தென் கொரியா அணி மற்றொரு கோல் அடித்து, 4-3 என்ற கணக்கில் அப்போதும் இந்தியாவே முன்னிலை வகித்தது. இந்த போட்டியின் நான்காவது கட்டத்தின் பரபரப்பில் இந்திய அணி வீரர்கள் மேலும் ஒரு கோல் அடித்தனர்.
இதனால் 5-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தென்கொரியா அணியை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் இந்தியா ஹாக்கி ஆண்கள் அணி மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.