அருணாச்சல் பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குச் சிக்கலான அறுவை சிகிச்சை செய்த ராணுவ மருத்துவ குழுவினர் குழந்தையையும் தாயையும் காப்பாற்றியுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக ராணுவ மருத்துவமனைகளில் பொது மக்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் அருண்ச்சால பிரதேசத்தில் உள்ள டாவூங் எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ மருத்துவ குழுவினர் அப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குச் சிக்கலான அறுவைச் சிகிச்சை மூலம் தாயையும் சேயையும் காப்பாற்றியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய ராணுவ படையினர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான தகவலைப் பகிர்ந்துள்ளனர். அதில், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவ குழுவினர் டாவூங் பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சையைச் செய்து அவர்களைக் காப்பாற்றி உள்ளனர். இதற்காக அப்பகுதி மக்கள் ராணுவ மருத்துவர்களுக்கு தங்களுடைய நன்றி தெரிவித்துள்ளனர்”