இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் பும்ரா, ஷமி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டாவது நாளான நேற்று ரோகித் சர்மாவும், கே.எல். ராகுலும் ஆட்டத்தை தொடர்ந் தனர். ஸ்கோர் 97 ரன்களை எட்டிய போது, நிதானமாக ஆடிய இந்த ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 36 ரன்களில் ராபின்சனின் ஷார்ட் பிட்ச் பந்தை தொட்டு கேட்ச் ஆனார்.
நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 4 ரன்களிலும் கேப்டன் விராத் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றினர். இருவர் விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கும்பிளேவின் (619 விக்கெட்) சாதனையை சமன் செய்தார்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 125 ரன்கள் எடுத்துள்ளது. மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. கே.எல்.ராகுல் 57 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 7 ரன்னுடனும் ஆட்டமிழக் காமல் உள்ளனர். மூன்றாவது நாள் ஆட்டம் இன்று மாலை நடக்க இருக்கிறது.