நாட்டில் புதிதாக 6,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 6,563 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் கேரளாவில் மட்டும் 2,995 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,47,46,838 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்புகளுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 132 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,77,554 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 8,077 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,41,87,017 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 82,267 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,37,67,20,359 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,82,079 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.