கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,051 ஆக பதிவாகியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் புதியதாக 16 ஆயிரத்து 51 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 206 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய கொரோனா தொற்று எண்ணிக்கையை விட தொற்று எண்ணிக்கை இன்று மிக குறைவாகவே பதிவாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், 37 ஆயிரத்து 901 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சத்து 2 ஆயிரத்து 131 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Unite2FightCorona#LargestVaccineDrive#OmicronVariant
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/pKEuqHhwvS pic.twitter.com/nrpT7IYB3H
— Ministry of Health (@MoHFW_INDIA) February 21, 2022
இந்நிலையில், கொரோனாவை மேலும் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இதுவரை 175.46 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் கொரோனா பெருந்த்தொற்றை எதிர்த்து போராடும் வகையில், சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளும், பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும், ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைப்பெற்று வருகிறது.