இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது சுற்றில் சாய்னா நேவால் வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடங்கி வருகிற 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நேவால், லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய், ஸ்ரீகாந்த், சாத்விக் சாய்ராஜ் ஆகர்ஷி காஷ்யப் உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்கிறார்கள். இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.7½ கோடி பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட் உடன் மோதினார்.
முதல் செட்டை 21-17 என கைப்பற்றிய சாய்னா, இரண்டாவது செட்டில் 12-21 என கணக்கில் தோற்றார். இந்த நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை 21-19 என கைப்பற்றிய சாய்னா 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கு சாய்னா நேவால் முன்னேறியுள்ளார்