இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 26 லட்சத்து 62 ஆயிரத்து 575 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் 3 ஆயிரத்து 754 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 818 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை ஒரு கோடியே 86 லட்சத்து 71 ஆயிரத்து 222 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 17 கோடியே 1 லட்சத்து 76 ஆயிரத்து 603 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.







