உ.பி-யில் INDIA கூட்டணி முன்னிலை – அயோத்தியில் பாஜக பின்னடைவு!

உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. …

உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.   முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன.

தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பரவலாக பாஜக முன்னணி வகிக்கிறது.  543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  அதன்படி,  பாஜக கூட்டணி 287 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 224 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

பின்னர் மற்ற கட்சிகள் 32 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.  இந்த நிலையில்,  உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.  அதன்படி, இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.  பாஜக 27 தொகுதிகளும், காங்கிரஸ் 6 தொகுதிகளும் பிற கட்சிகள் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதேபோல பைசாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் “லல்லு சிங்” பின்னடைவு, இந்த தொகுதியில் தான் அயோத்தியா உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.