31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான திட்டச் செலவு ரூ.50,000 ஆக உயர்வு

திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கான செலவினத் தொகையை ரூ.20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏழை, எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில்களில் திருமணம் நடத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படியில் மணமக்களுக்கு மணமகன் ஆடை, மணமகள் ஆடை, மணமகன், மணமகள் வீட்டாா்களுக்கு 20 நபா்களுக்கு விருந்து, 2 கிராம் திருமாங்கல்யம், மாலைகள், சீா்வரிசை பாத்திரங்கள் என 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து திருமணம் நடத்தி வைக்கபப்டுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ 20,000 -லிருந்து ரூ 50,000 – ஆக உயர்த்தி நிர்ணயம் செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை:

  1. திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவினை ரூ.15,000/-லிருந்து ரூ.20,000/- ஆக உயர்வு செய்தும், ஆண்டுதோறும் ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடத்தவும் இதற்கு தேவைப்படும் மொத்த செலவின தொகை ரூ.1,00,00,000/- திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டது.

2. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், 04.12.2022 அன்று சென்னை-1 மற்றும் சென்னை-2 இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேற்படி 31 இணைகளையும் சேர்த்து 20 இணை ஆணையர் மண்டலங்களில் 217 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன .

இந்நிலையில் சட்டமன்ற அறிவிப்பின்படி இன்னும் 283 ஏழை எளிய இணைகளுக்கு திருக்கோயில் மூலம் இலவசத் திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளதென்றும், திருகோயில்கள் மூலம் இலவசத் திருமணம் அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவான ரூ.20.000/- தொகையினை ரூ.50,000/- ஆக உயர்த்தி கீழ்க்கண்ட திட்ட விவரப்படி திருக்கோயில் நிதிமூலம் செலவினம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்குமாறு ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன் அடிப்படையில் இந்து அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசிலனை செய்தது. பரிசீலனைக்குப் பின்னர் அதனை ஏற்று, திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்ட செலவினத் தொகை இயன்ற வரையில் உபயதாரர்கள் நிதி மூலம் மேற்கொள்ளப்படுவதாலும், உபயதாரர் கிடைக்காத நிலையில் நிதிவசதிமிக்க திருக்கோயில்கள் மூலமே திருமணம் நடத்தி வைக்கப்படுவதாலும், திருக்கோயில்களில் நடத்தப்படும் ஒரு இணை இலவசத் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20.000/-லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது.,’ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தி வழங்கப்பட்டுள்ள ரூ.50,000 -த்திற்கான திட்ட விவரம்:

திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம் : ரூ.20,000/-
மணமகன் ஆடை:ரூ.1000/-
மணமகள் ஆடை: ரூ.2000/-
திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு : ரூ.2000/-
மாலை, புஷ்பம் – ரூ.1000/-
பீரோ : ரூ.7,800
கட்டில்-1 : ரூ.7,500
மெத்தை : ரூ.2,200
தலையணை-2 : ரூ.190
பாய்-1 : ரூ.180
கைக்கடிகாரம்-2 : ரூ.1,000
மிக்ஸி-1 : ரூ.1,490
பூஜை பொருட்கள் + பாத்திரங்கள் வகையறா : ரூ.3,640

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading