மகளிர் கால்பந்து அணிக்கு ஊக்கத்தொகை; அமைச்சர் மெய்யநாதன்

தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார். 2018-ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி…

தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார்.

2018-ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட அரசின் எந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனை அடுத்து மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார். மேலும், சாதனை படைத்த மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகளுக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.