மதுராந்தகம் கோதண்டராமர் கோவிலில் வசந்த மண்டபம் திறப்பு!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கோதண்டராமர் திருக்கோயில் ஸ்ரீ சோழ மண்டபம் மற்றும் வசந்த மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் , மதுராந்தகம் ஸ்ரீ ஏரிகாத்த ராமர் என்ற கோதண்டராமர் திருக்கோயிலில்,…

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கோதண்டராமர் திருக்கோயில்
ஸ்ரீ சோழ மண்டபம் மற்றும் வசந்த மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சி
நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் , மதுராந்தகம் ஸ்ரீ ஏரிகாத்த ராமர் என்ற கோதண்டராமர் திருக்கோயிலில், வரலாற்று சிறப்புமிக்க மிகவும் பழமையான கங்கைகொண்ட சோழ மண்டபம் மற்றும் வசந்த மண்டபம் உள்ளது. மேலும், இவற்றை உபயதாரர் ரூப்கிஷன், மீராகிஷன் ஆகியோரால் ரூபாய் 76 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டு , அதனை பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

இதில் , சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், க.சுந்தர்
எம்எல்ஏ மற்றும் மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் ஆகியோர் கலந்து கொண்டு மண்டபங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மேலும், கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.