தாராபுரத்தை அடுத்த ஊதியூர் வனப்பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக பதுங்கி
இருந்த சிறுத்தை மூலனூர் பகுதியை நோக்கி இடம் பெயர்ந்துள்ளதாக வனத்துறையினர்
தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு மேலாகப் பதுங்கி இருக்கும் சிறுத்தை விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்கள், கால்நடைகளைக் கொன்று சாப்பிட்டு வருகிறது.
வனத்துறையினர் 30 கண்காணிப்பு கேமராக்கள், 4 கூண்டுகள் வைத்து சிறுத்தையைப்
பிடிக்க முயற்சித்தனர். ஆனால் சிறுத்தைக் குறித்த காட்சிகள் கேமராக்களில்
பதிவாகவில்லை. கூண்டிலும் சிறுத்தை சிக்கவில்லை. இருப்பினும் வனத்துறையினர் இரவு பகலாக சிறுத்தையை தேடி வருகின்றனர்.
சிறுத்தை அடிக்கடி வந்து போகும் இடத்தைக் கண்டுபிடித்து அப்பகுதியில் கூண்டுகள்
வைத்துப் பிடிக்கவும், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டும் சிறுத்தையைத்
தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி சுமார் 1 மாத காலம் ஆனா நிலையில் ஊதியூர் மலையடிவாரப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.
இதனை அடுத்து தாராபுரம் – மூலனூர் அருகே பெரமியம் ,பொம்பிபாளையம் என்ற பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் காலை 6.30 மணியளவில் பொன்னுசாமி என்ற விவசாயி ,சிறுத்தைச் சென்றதைப் பார்த்துஏள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல்தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காங்கயம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பதிவான கால்தடங்களை
ஆய்வு செய்தனர். ஆய்வில் சிறுத்தையின் கால்தடம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுத்தையைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
—-ரெ.வீரம்மாதேவி