இந்தூர் கிணறு விபத்து: சட்டவிரோதமாக கட்டிடம் எழுப்பியதாக கோயிலை இடித்து அகற்றிய நகராட்சி ஊழியர்கள்

மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயிலை நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர். கடந்த வாரம் ராம நவ­மியை முன்­னிட்டு கோயி­லில் திரண்ட ஏராளமான பக்­தர்­களில் பல­ரும் அந்­தப் பாலங்களின்மீது நின்­று­கொண்டு இருந்­த­போது எடை…

மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயிலை நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.

கடந்த வாரம் ராம நவ­மியை முன்­னிட்டு கோயி­லில் திரண்ட ஏராளமான பக்­தர்­களில் பல­ரும் அந்­தப் பாலங்களின்மீது நின்­று­கொண்டு இருந்­த­போது எடை தாங்­கா­மல் கான்கிரீட் மூடிகள் உடைந்­தன.

பக்­தர்­கள் பல­ரும் கிணற்­றுக்­குள் விழுந்­த­னர். கிணற்­றின் சுவ­ரும் இடிந்து விழுந்­த­தால் இடி­பா­டு­களில் பல­ரும் சிக்­கிக்கொண்­ட­னர். அந்­தத் துயர சம்­ப­வத்­ தில் 35 பேர் மரணமடைந்­து­விட்­ட­னர். 14 பேர் மீட்­கப்­பட்­ட­னர். டஜன் கணக்­கான பக்தர்கள் காயம் அடைந்­துள்­ள­னர்.

இதில் 35 பேர் உயிரிழந்தன நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கோயிலில் சோதனை நடத்தப்பட்டது. அதில், கிணற்றின் மேல் சட்டவிரோதமாக கட்டடம் கட்டப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கோயில் நிர்வாகத்தின் தலைவர் மற்றும் செயலாளர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 304-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தூர் நகர காவல் ஆணையர் மக்ரந்த் தியோஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கோயிலை இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயிலை புல்டோசரை கொண்டு நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.