35.3 C
Chennai
June 16, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் அருவருப்பு அரசியல் செய்யும் சிலர் Fake நியூஸ் அனுப்புகிறார்கள் – அமைச்சர் உதயநிதி

தமிழ்நாட்டில் சிலர் அருவருப்பு அரசியல் செய்து வருவதாகவும், போலியான செய்திகளை பரப்புவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 06 ஆம் தேதி, கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. கின்னஸ் சாதனைக்காக்காக மேற்கொள்ளப்படும் இந்த மாரத்தான் போட்டிக்கான முன்பதிவு தொடக்க விழா சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், காந்தி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மிகச்சிறந்த ஆளுமையாக வலம் வருகிறார் உதயநிதி. பொது, வேளாண், மகளிர், இளைஞர்கள் என 4  நிதிநிலை அறிக்கைகள் தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்படுவதாகவே கருத வேண்டும். ’சுகர் வந்துட்டா லைஃபே போச்சுனு’ ஊக்கப்படுத்தும் சில நண்பர்கள் இருப்பாங்க. எனக்கும் இருந்தார்கள். 139 மாரத்தான்கள் இதுவரை ஓடியுள்ளேன். சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வுக்காகவே ஓடுகிறேன். நான் 63 வயசு கிழவன்னு வச்சுக்கோங்க. என்னாலேயே ஓட முடியும்போது, உங்களாலும் முடியும்” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி, “மா.சுப்பிரமணியனுக்கு வயசு 63-னு சொன்னா யாராவது நம்புவாங்களா? மாசுனாலே மாரத்தான் வீரர். ஃபிட்டான முதலமைச்சர்-னா நம்ம முதலமைச்சரை சொல்லலாம். அடுத்தது அண்ணன் மா.சுப்பிரமணியன் தான். மாசு, சேகர்பாபு, சிற்றரசு ஆகியோருக்கு நிகழ்ச்சிகள் நடத்துவதில் போட்டியே இருக்கும். அது மக்களுக்காகத்தான்.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் 8 புதிய மாவட்டங்கள்? – அமைச்சர் KKSSR ராமசந்திரன் விளக்கம்

அதிகமா பாதிக்கப்படுறது நான்தான். அவர்களுக்கு பயந்தே சுற்றுப்பயணம் சென்று விடுகிறேன். எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் மா.சுப்பிரமணியன் ஓடுகிறார். பாவம் அரசு அதிகாரிகள். மாரத்தானில் ஓடும் திருநங்கைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,000 திமுக இளைஞர் அணி சார்பாக வழங்குகிறேன். முதல் சட்டமன்றத்திலேயே கன்னிப்பேச்சில் பேசியது திருநங்கைகளுக்காகத்தான். மத்திய சென்னையில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம்.

இது வாட்ஸ் அப் யுகம். அதிகமா ரீச் ஆகனும். ரீடிவிட் ஆகனும் என்று ஃபார்வர்டு செய்துவிடுகிறோம். செய்தி உண்மையா? இல்லையானு பகுத்தறிந்து பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் சிலர் அருவருப்பு அரசியல் செய்து வருகின்றனர். Fake நியூஸ் அனுப்புகிறார்கள்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading