கொடைக்கானலில் சீசன் துவங்க உள்ள நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர்
தரமற்ற சாலை அமைத்தது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கபடும் கொடைக்கானலில் ஓவ்வொரு ஆண்டும் கோடை சீசன் ஏப்ரல் மாதம் துவங்கி மே மாதம் வரை நீடிக்கும். சுற்றுலாப் பயணிகள்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு வெளிமாநிலங்களில்
இருந்தும் கொடைக்கானலுக்கு வருகை புரிவர்.
தற்பொழுது சீசன் துவங்க இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் முக்கிய சுற்றுலாத் தளமான மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட், குணா குகை,தூண் பாறை,பசுமை பள்ளத்தாக்கு போன்ற சுற்றுலாத் தளங்களுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. தற்பொழுது நெடுஞ்சாலைத் துறை சார்பாக ரூ 2.5 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் போடப்பட்ட தார் சாலை தற்பொழுது பெயர்ந்து
வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.மேலும் அரசு பணத்தை வீணடிப்பதாகவும் நெடுஞ்சாலைத் துறை மீது குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் சேதமடைந்த தார் சாலையை மீண்டும் சீரமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ரெ.வீரம்மாதேவி
கொடைக்கானலில் 2.5கோடி மதிப்பில் போடப்பட்ட தரமற்ற சாலை- சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.