சென்னையில் கொட்டித் தீர்த்த மழை-விமான சேவை பாதிப்பு

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும்…

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது.

இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிப்பட்டனா்.

ஜொ்மன், தோகா, துபாய், மும்பை ஆகிய இடங்களிலிருந்து வந்த 4 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் ஹைதராபாத்,பெங்களூா் ஆகிய நகரங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.

மலேசியா, தாய்லாந்து, டெல்லி, ஐதராபாத், வாரணாசி, மங்களூா், திருச்சி உட்பட 12 இடங்களிலிருந்து சென்னை வந்த விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானில் வட்டமடித்து பறந்து தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

அதேபோல சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 8 சா்வதேச விமானங்கள் உட்பட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சென்னையில் திடீா் மழை, சூறைக்காற்று காரணமாக விமான நிலையத்தில் 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.