30 C
Chennai
May 19, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்களுக்கு விருப்பம் இல்லையெனில், 8 வழி சாலை திட்டத்தை புகுத்த போவதில்லை -மத்திய அமைச்சர் வி.கே.சிங்

மக்களுக்கு விருப்பம் இல்லையெனில், எட்டு வழி சாலை திட்டத்தை மக்களிடம் புகுத்த போவதில்லை என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி பாரதி,ய ஜனதா கட்சியின்
பாராளுமன்ற குழு கூட்டம் திருமயம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சாலை போக்குவரத்து மற்றும்
நெடுஞ்சாலை துறை மத்திய அமைச்சர் விஜயகுமார் சிங் செய்தியாளர்களை
சந்தித்தபோது, டோலின் காலம் முடிந்த பிறகு மெல்ல மெல்ல மராமத்து பணிகள் செய்யப்பட்டு டோல்கேட் தொடரும் எனவும் தற்போது பரிசோதனையின் அடிப்படையில் புதிய தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருகிறோம என கூறினார்.

அதாவது வெளிநாடுகளில் இருப்பது போல நேரடியாக வாகனங்களை நிறுத்தாமல் டோலின் மேல் பொருத்தப்பட்ட நவீன கருவின் மூலம் கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணம் நேரடியாக வசூலிக்கப்படும் படி வெளிநாடுகளைப் போல் இந்த டோல் சிஸ்டம் செயல்படுத்தப்படும். அதற்கான திட்டம் பரிசீலனையில் இருக்கிறது என்றும் இதே வேளையில் தற்போது சிலர் பணம் செலுத்தாமல் டோலில் இருந்து தாவி விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அது சரி செய்யப்படும் என்றார்.

ஒவ்வொரு 60 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு டோல் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இடையில் புதிதாக ஏதேனும் பாலம் கட்டுமான பணி வருகின்றபோது அதன்
அருகிலேயே ஒரு டோல்கேட் அமைக்கக்கூடிய கட்டாயம் இருக்கிறது.டோல்கேட்டில்
வசூலிக்கப்படும் பணம் பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகள், மராமத்து
பணிகளுக்காக சுழற்சி முறையில் செலவிடப்பட்டு வருகிறது என்றார்.

பயண தூரத்தையும், நேரத்தையும் குறைப்பதற்காக இந்திய அரசு ஒரு திட்டத்தை
கையில் எடுத்திருக்கின்றது.கிரீன் பீல்ட் அலைன்மென்ட் அதாவது நகருக்குள்
வாகனங்கள் செல்லாமல் இந்த பாதை வழியாக செல்லும் பொழுது நேரத்தை குறைப்பதாகவும் இந்த திட்டம் பயன்படும் எனவே சாலைகள் இருந்தாலும் இந்தத் திட்டத்தின் அடிப்படையில் புதிய சாலை பணிகள் நடைபெறும் என்றார்.

எட்டு வழி சாலைகள் அமைக்கும் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், சட்டத்தின் அறிவுறுத்தல் படி மக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும். ஒருவேளை நிலம் கையகப்படுத்த முடியாமலோ மக்களுக்கு விருப்பம் இல்லாமலோ இருந்தால் அதை மக்களிடம் புகுத்த போவதில்லை என்றும் மத்திய
அமைச்சர் விஜயகுமார் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading