பாஜகவுக்கு சசிகலா வந்தால் வரவேற்போம்: நயினார் நாகேந்திரன்

பாஜகவுக்கு சசிகலா வந்தால் வரவேற்போம் என்று முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். புதுக்கோட்டைக்கு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

பாஜகவுக்கு சசிகலா வந்தால் வரவேற்போம் என்று முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

புதுக்கோட்டைக்கு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பாஜக
தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம்
பேசுகையில், அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும்.
பாஜகவில் சசிகலா சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்று திமுக கூறியது. ஆனால், இரண்டு முறை தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துவிட்டது. இருப்பினும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கத் தயாராகவில்லை. பெயரளவிற்கு பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைத்துவிட்டு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு வருகின்றனர்.

ஒன்றிய அரசு என்று கூறுவதை திமுகவினர் பெருமையாகக் கருதுகின்றனர். திமுக தங்களை பெருமைப்படுத்திக் கொள்வதை முன்னெடுத்து செல்கிறதே தவிர மக்கள்
பிரச்சினையையும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள்
முன்னெடுக்கவில்லை. தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.