ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை
விரைவில் தொடங்கப் நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்புவேன் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பாகுளம் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இந்த கடம்பாகுளத்தின் கரை மற்றும் பாசன கால்வாய்களை பலப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த வருடம் பெய்த மழையில் கூட பொதுமக்களும், விவசாயிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சுமார் ரூ.34 கோடி மதிப்பிலான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் இந்த பணிகளை தொடங்கி வைப்பதற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற
உறுப்பினர் கனிமொழி வருகை தந்தார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா
ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் வருகை
தந்தனர். அவர்கள் இந்த பணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020 ம் ஆண்டு நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை. மத்திய அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடம் பெற்று தந்தால் பணிகளை விரைவில் தொடங்குவோம் என்று அறிவித்தனர்.
தமிழக அரசின் முயற்சியாலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் முயற்சியாலும் ஆதிச்சநல்லூரில் சங்கர் கணேஷ் என்பவர் தனது இடத்தினை வழங்கியுள்ளார். ஆனால் தற்போது வரை இந்த பணிகள் தொடங்கவில்லை. எனவே வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தில் இதுகுறித்து நான் கேள்வி எழுப்புவேன். மேலும் இது தொடர்பாக அமைச்சரையும் சந்தித்து இதுகுறித்த கோரிக்கையை வலியுறுத்துவேன் என தெரிவித்தார்.