கட்சியின் கட்டுப்பாட்டுக்காக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவியை துறந்ததாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை பசுமலையில் திமுக மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒரு வார்டுக்கு 2 வேட்பாளர்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது, ஆனால் தற்போது ஒரு வார்டுக்கு 5 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை
பொது செயலாளர் துரைமுருகன் நாளை மாலைக்குள் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளார்,
ஆனால் ஒரு வார்டுக்கு அதிகபட்சமாக 8 பேர் வரை போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உள்ளாட்சித் தேர்தலில் ஒரே நபர் அல்லது ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஒரே இடத்தில் பதவி வழங்க முடியாது. நகர்ப்புற உள்ளாட்சியில் போட்டியிடுபவர்கள் தங்கள் வகிக்கும் கட்சி பதவியை விட்டு கொடுக்க வேண்டும். கூட்டணி கட்சியுடன் சமூகமாக தேர்தலை சந்திக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் பெற்று, வளர்த்த பிள்ளையாக நினைத்த தகவல் தொழில்நுட்ப அணி பதவியை, கட்சியின் கட்டுப்பாட்டுக்காக துறந்தேன்” என்றும் பேசினார்.