கடந்த சில வருடங்களாக தமிழில் தனக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என இசையமைப்பாளர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர், தனது பிறந்தநாள் மற்றும் திரைத்துறையில் 34 ஆண்டு நிறைவு செய்ததை முன்னிட்டு சென்னை தி நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நான் இத்தனை ஆண்டுகள் இசையமைப்பாளராக இருந்தும் தமிழ்நாட்டில் இதுவரை ஒரு இசை நிகழ்ச்சி கூட நடத்தவில்லை. மலையாளத்திலும் எந்த இசை நிகழ்ச்சியும் நடத்தவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விரைவில் நாங்கள் நடத்த இருக்கும் இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு இசைவிருந்தாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளிலும் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்த உள்ளோம். நான் முதலில் இசை நிகழ்ச்சி நடத்துவது ஸ்பெஷல் தான். அதிலும் நீங்கள் பார்க்க வருவது இன்னும் ஸ்பெஷல். இந்த இசை நிகழ்ச்சி எப்போது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இடம் உறுதி செய்துவிட்ட பின்னர் தேதி அறிவிக்கப்படும். மக்கள் திரண்டு வந்து பார்க்க வேண்டும் என்பதே முக்கியம்.
இதையும் படியுங்கள் : 3 மாநில தேர்தல் முடிவுகள் : LiveUpdates
இன்றைய இசை உலகில் பல புதியவர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. மக்கள் புதுமையை வரவேற்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக இசைத் துறையில் பணியாற்றி பெற்றது மக்களின் பேராதரவும் அன்பும் மட்டுமே. இத்தனை ஆண்டுகள் இசை பயணத்தில் நான் கற்றது, இன்னும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தது தான். மெலடி பாடல் என்பது அந்தந்த காலத்தில் மக்கள் ஏற்றுக்கொள்வதே.
கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் மலையாளத்தில் பிஸியாக இருந்தேன். என்னை பொறுத்தவரை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஒரு தேவதூதன். அவருடைய பங்கு வார்த்தைகளால் சொல்ல
முடியாது. அவருடைய இழப்பு, தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு. இந்த தருணத்தில் அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்பார். அவரே வந்து என்னுடைய நிகழ்ச்சியில்
பாடி இருப்பார். இந்த இசை நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக ரஜினி, விஜய் இருவரையும்
அழைப்பேன். அவர்கள் வருவதும் வராமல் இருப்பதும், அவர்களுடைய விருப்பம்” என்று தெரிவித்தார்.