28 C
Chennai
December 7, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை”- ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

“தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை,  மர்மமான கூட்டத்தை கூட்டுவது போல காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை
கூட்டுகின்றனர்” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்ட பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான ஆய்வு பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட பலரும்  பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த கூட்டத்திற்கு பிறகு பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தரம் குறித்தும், காலதாமதம்
குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் கலவை தரம் சந்தேகமாக இருப்பதால் சிமெண்ட் கலவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக கூறினார். ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியருக்கு விருதுகள் வழங்க அரசுக்கு பொதுக்கணக்கு குழு பரிந்துரை செய்துள்ளது என்றார்.

பொன்முடி ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தி
வருகிறார்கள். இதனை தமிழகத்தில் உள்ள ஊராட்சியில் செயல்படுத்த பொதுக்கணக்கு குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து கிழக்கு தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள ஆளுநருக்கு அடிப்படையில் சில பிரச்சனைகள் உள்ளது. அவருக்கு
மனநிலை சரியில்லை என்று நினைக்கிறேன்.ஆளுநர் நடவடிக்கையில் கடந்த நான்கு நாட்களில் பல மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதலில் அவர் மனிதராக மாற வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கூட்டம் என்றால் என்னை போன்றவர்களுக்கு அழைப்பு வரும். ஏன் என்று தெரியவில்லை, மர்மமான கூட்டமா என்று தெரியவில்லை. பத்திரிகை வாயிலாக தான் சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் நடத்தப்படுவதாக தெரிந்து கொண்டேன். மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு என்று சொல்லவில்லை என்னை பொறுத்தவரை என்னை முதலில் மூத்த தலைவர் என்று சொன்னார்கள். பிறகு முன்னாள் தலைவர்கள் என்று சொன்ன நிலையில் தற்போது முடிந்து போன தலைவர்கள் என்று சொல்கிறார்கள். செந்தில் பாலாஜியின் தலையில் இருந்து கால் வரை உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் முதலில் தகுந்த சிகிச்சை தரவேண்டும்.ஐந்து மாநில இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி பஞ்ச பாண்டவர்கள் போல் வெற்றி பெறுவோம் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy