நான் ஒரு நிரபராதி – டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தான் நிரபராதி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம்…

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தான் நிரபராதி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

மேலும் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் நேற்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறையினர் 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

டிடிவி தினகரன் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் இருவரிடமும் தனித்தனி அறையில் விசாரணை நடைபெற்ற நிலையில் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் அரசியல் பின்புலம் உள்ளது என்றும் அது யார் என்று தனக்கு தெரியவில்லை எனவும் கூறினார். மேலும் இந்த வழக்கைப் பொறுத்தவரை தான் நிரபராதி எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.