இவர்கள் மூவருக்கும் கடமைப்பட்டுள்ளேன்! – ஈவிகேஎஸ் இளங்கோவன் உருக்கம்

சிவாஜி கணேசன், சோனியா காந்தி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய மூவருக்கும் தான் கடமைப்பட்டுள்ளதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

சிவாஜி கணேசன், சோனியா காந்தி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய மூவருக்கும் தான் கடமைப்பட்டுள்ளதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்னுடைய பொதுவாழ்வில் சிவாஜி கணேசன், சோனியாகாந்தி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய மூவருக்கு கடமைப்பட்டுள்ளேன். மறக்கமாட்டேன். இவர்கள் மூவரும் உயர்விற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தவர்கள்.

இதையும் படியுங்கள் : தீபாவளிப் பண்டிகையை பொது விடுமுறை நாளாக அறிவித்தது பென்சில்வேனியா!

திருமகன் ஈவெரா சாலை என பெயர் வைத்ததற்கு அமைச்சர் முத்துசாமிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து நிறைவேற்றுவேன். அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மேற்கு தொகுதிக்கு மட்டும் அல்லாமல், ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் எம்எல்ஏவாக உள்ளார்.

ஈரோடு பகுதியில் பால் உற்பத்தியை அதிகரித்த எஸ்கே பரமசிவம், லட்சுமண ஐயர் ஆகிய இருவருக்கும் சித்தோடு ஆவினில் சிலை வைக்கவேண்டும். இத்தனை ஆண்டுகளாக கோபி எம்எல்ஏ-வாக இருக்கக்கூடியவர் ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு செல்லவேண்டியவராகவே இருக்கும் நிலையில், அங்கு உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. கர்நாடகாவில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி அமையும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.