நாளை கூடுகிறது தமிழ் நாடு சட்டமன்றம்…!

தமிழ் நாடு சட்டமன்றம் நாளை காலை கூடுகிறது.

தமிழ் நாட்டின் 13வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அவருக்கு மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து 9 பேர் கொண்ட அமைச்சர்களும் பதவியேற்றனர்.

தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழ் நாடு சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் தமிழ் நாடு சட்டமன்றம் நாளை காலை 9 : 30 மணிக்கு கூடுகிறது. இக்கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். தொடர்ந்து நாளை மறுதினம் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.