எருமை பாறை மலைவாழ் கிராமத்தில் கொடிய விஷம் கொண்ட ராஜநாக பாம்பை வளர்ப்பு கோழி விரட்டியடித்துள்ளது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் எருமைபாறை உள்ளது. அந்த மலைவாழ் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட காடர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை ஆகிய வனவிலங்கு அடிக்கடிவந்து செல்வது வழக்கம். இந்நிலையில் எருமைபாறை வன கிராமத்திற்குள் கொடிய விஷம் கொண்ட ராஜநாக மலைப்பாம்பு ஒன்று மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் மலைவாழ் மக்கள் வளர்க்கப்படும் கோழி அப்பகுதிக்குள் அந்த ராஜநாக மலைப்பாம்பை தன் பகுதிக்குள் வராமல் நீண்ட நேரம் போராடி தடுத்து வனப்பகுதிக்குள் அனுப்பியது. இதைக் கண்ட அப்பகுதி மலைவாழ் மக்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.







