முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

கனமழை எதிரொலி – 24 ரயில்கள் ரத்து!

இரண்டு நாட்களாக பெய்த கனமழையில் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால், நெல்லை மற்றும் திருநெல்வேலியிலிருந்து இயக்கபடவிருந்த 24 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின. இதனால் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த கனமழையால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெள்ளத்தாலும்,  இருப்புப் பாதைகள் சேதங்களினாலும் தென் மாவட்டங்களில் ரயில்வே அனைத்தும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படவிருந்த 24 ரயில்கள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டை, வாஞ்சி, மணியாச்சி, சென்னை, பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படவிருந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாகர்கோவில் – கோவை, திருச்செந்தூர் – பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் 5 விரைவு ரயில்கள் திண்டுக்கல் வரை இயக்கப்படுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

விரைவில் வெளியாகும் ஓலா இ-கார்?

G SaravanaKumar

குற்றாலத்தில் சூப்பர் சீசன் – படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!…

Web Editor

டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா

Halley Karthik

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading