32.9 C
Chennai
June 26, 2024
முக்கியச் செய்திகள்

ஆதம்பாக்கத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு : போலீஸ் விசாரணை

ஆதம்பாக்கத்தில் குடிப்பழக்கத்தை விட சொல்லியதால் புதுமாப்பிள்ளை உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (29). கால்டாக்ஸி டிரைவர். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். இவருக்கு கடந்த 25 நாட்கள் முன் திருமணமானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், புது மாப்பிள்ளையான விஜயன் தன்னுடைய கூட பிறந்த அக்கா
வீட்டுக்கு விருந்துக்காகச் சென்று வந்துள்ளார். அப்போதும் குடிபோதையில் தான்
இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விஜயனின் அக்கா ஏன் அதிகமாய்
குடிக்கிறாய் தற்போது திருமணமாகிவிட்டது. இனிமேலாவது குடிப்பழக்கத்தை விடு
என்று கண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த விஜயன் தனது வீட்டிற்கு வந்து மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதையடுத்து, ஆதம்பாக்கம் போலீஸார் விஜயனின் உடலைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருமணமான 25 நாள்களில் புது மாப்பிள்ளை உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading