மதுரையில் மாபெரும் புத்தககண்காட்சி – செப்டம்பர் 23-ம் தேதி தொடக்கம்

“மதுரை மாநாட்டு மையத்தில்” மாபெரும் புத்தக கண்காட்சி வருகின்ற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மதுரையில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக…

“மதுரை மாநாட்டு மையத்தில்” மாபெரும் புத்தக கண்காட்சி வருகின்ற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மதுரையில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகின்ற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் “மதுரை மாநாட்டு மையத்தில்” மாபெரும் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பாக ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட புத்தக அங்காடிகள் அமைக்கப்படவுள்ளது. இப்புத்தக கண்காட்சியில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கமும், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் கவிதை மற்றும் கட்டுரை பேச்சுகள். புனைவு, நாடகம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண்கலை தொடர்பான பயிலரங்கங்கள் சிறந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்படவுள்ளது.

தினந்தோறும் மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சாளர்களின் உரை வீச்சுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. எனவே, வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் பொருட்டு இப்புத்தக கண்காட்சியில் சிறார்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.