நீட் தேர்வு பயத்தால் 10 நாட்களில் மூன்று உயிரிழப்புகள் நடந்துள்ளன. எனவே நீட் விலக்கு பெறுவதில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் அரியலூரைச் சேர்ந்த நிஷாந்தி என்ற மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த 10 நாட்களில் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூர் முரளி கிருஷ்ணா, அரியலூர் நிஷாந்தி என மூவர் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வு மாணவர்க் கொல்லி என்பதற்கு இது தான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும்.
இவ்வளவுக்குப் பிறகும் இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் சலனமில்லாமல் இருப்பது ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது. தமிழக அரசு இந்த விஷயத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல், மத்திய அரசை அணுகி நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும்.
அதே நேரத்தில் நீட் சிக்கலுக்கு உயிரிழப்பு தீர்வல்ல என்பதையும், மருத்துவம் மட்டுமே படிப்பல்ல என்பதையும் மாணவர்களும், பெற்றோரும் உணர வேண்டும். நீட்டுக்கு அஞ்சி மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.