முக்கியச் செய்திகள்தமிழகம்

பேருந்துகளின் ஆயுட் காலத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட் காலத்தை நீட்டித்து போக்குவரத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் தற்போது மூன்று ஆண்டுகள் அல்லது ஏழு லட்சம் கிலோ மீட்டர் என உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை இனி வரும் காலங்களில் ஏழு ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விரைவுப் பேருந்துகள் அல்லாத பிற அரசு பேருந்துகளின் ஆயுட் காலம் தற்போது ஏழு லட்சம் கிலோ மீட்டர் அல்லது ஆறு ஆண்டு காலம் என்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது இனி வரும் காலங்களில் ஒன்பது ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீன தொழில் நுட்பம் கொண்ட பேருந்துகள் என்பதாலும், புதிய சாலை வசதிகள், நவீன வடிவமைப்பு காரணமாக ஆயுட் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

மும்பையில் இன்று தொடங்குகிறது 2-வது டெஸ்ட்

Halley Karthik

டான் திரைப்படத்தில் நடிக்க மறுத்து விட்டேன் – உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்

Web Editor

மக்கள் நீதி மய்யத்திற்கு மறுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னம்…. சட்ட வல்லுநர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை!

Saravana

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading