பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர்களை அழைக்க வேண்டும் என்பதற்காகவே தேதி கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்கயை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக 1 லட்சத்து 87ஆயிரத்து 693 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட, நடப்பாண்டில்18 ஆயிரத்து 610 விண்ணப்பங்களாக அதிகரித்துள்ளது. 7.5% இட ஒதுக்கீட்டில் 7,582 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். சலுகைகளின் காரணமாக மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 394 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவில் 5,024 விண்ணப்பங்கலும் வந்துள்ளன என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து, நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 15 ஆம் தேதியாவது வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஜூலை 2 ஆம் தேதி முதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். , அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்த அமைச்சர் பொன்முடி, பொறியியல் கல்லூரிகளின் கட்டமைப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் பொறியியலில், 9 லட்சத்து 25 ஆயிரம் பேர் படித்து முடித்து பட்டம் வாங்காமல் காத்திருப்பதாகவும், ஆளுநர் எப்போது தேதி கேட்டாலும் நாங்கள் கொடுத்து விடுவோம் என தெரிவித்தார்.
பின்னர், தொடர்ந்து பேசிய அவர், பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர்களை அழைக்க வேண்டும் என்பதற்காகவே தேதி கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார் என கூறிய அவர், தமிழ்நாட்டில் உள்ளவர்களை சிறப்பு விருந்தினர்களாக வைத்து பட்டமளிப்பு விழாக்களை ஆளுநர் உடனடியாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், பாரதியார் பல்கலைக்கழ துணைவேந்தர் பொறுப்பிற்கு 3 பெயர்களை பரிந்துரை செய்து வழங்கியுள்ளதாகவும், ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாகவும் அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டினார்.
- பி.ஜேம்ஸ் லிசா