மாநில அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அமைச்சர்கள் குழு ஒரு கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தால் அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஆளுநர்…

அமைச்சர்கள் குழு ஒரு கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தால் அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் பனிவாரிலால் புரோஹித் அனுமதி வழங்காததை எதிர்த்து அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என ஏற்கனவே பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பாக வழங்கி உள்ளது அமைச்சர்கள் குழு ஒரு கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தால் அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அண்மைச் செய்தி:  கோடை கால நோய்களை கண்காணிக்க வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

மேலும், பஞ்சாப் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதை மாநில ஆளுநர் தாமதப்படுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது மாநில முதல்வர் மற்றும் ஆளுநர் இருவரும் அரசியல் சாசன கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.  அரசியல் ரீதியாக கொள்கைகளில் வித்தியாசப்படுவது வேறு, அதே நேரத்தில் வேலை என்று வரும்போது  எந்த வேறுபாடும் காட்டாமல் வேலை செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.