புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்து 440-க்கு விற்பனையாகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

இதனையடுத்து, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை நேற்று சவரனுக்கு 160 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.77ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் வரலாற்றில் புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9 ஆயிரத்து 805-க்கும், சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்து 440-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.1,480 உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.