காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த கவுரவ் வல்லப் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த கவுரவ் வல்லப் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். காங்கிரஸில் இருந்து விலகிய நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அதன் தேசிய பொதுச் செயலாளர் வினேத் தாவ்டே முன்னிலையில் அவர் பாஜக-வில் இணைந்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய ராஜிநாமா கடிதத்தை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், காங்கிரஸ் கட்சி திசையில்லா பாதையை நோக்கி செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சனாதனத்துக்கு எதிரான கருத்துகள் கூறவோ, நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்பவர்கள் குறித்து அவதூறு கூறவோ முடியாது. எனவே தனது பதவியை ராஜிநாமா செய்வதாகவும், கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
कांग्रेस पार्टी आज जिस प्रकार से दिशाहीन होकर आगे बढ़ रही है,उसमें मैं ख़ुद को सहज महसूस नहीं कर पा रहा.मैं ना तो सनातन विरोधी नारे लगा सकता हूं और ना ही सुबह-शाम देश के वेल्थ क्रिएटर्स को गाली दे सकता.इसलिए मैं कांग्रेस पार्टी के सभी पदों व प्राथमिक सदस्यता से इस्तीफ़ा दे रहाहूं pic.twitter.com/Xp9nFO80I6
— Prof. Gourav Vallabh (@GouravVallabh) April 4, 2024