முக்கியச் செய்திகள்குற்றம்தமிழகம்செய்திகள்

சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை | அதிமுக நிர்வாகி உள்பட 7 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு!

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அதிமுக நிர்வாகி உள்பட 7 பேரை கைது செய்த போலீசார்,  ஒருவரைத் தேடி வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டம்,  வெள்ளக்கோவிலில்  கடந்த 9ம் தேதி இரவு வீரக்குமார சாமி கோயில் தேரோட்ட கலை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை கடத்திய  கும்பல் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அதிகாலை வரை கூட்டு பலாத்காரம் செய்து மீண்டும் அதிகாலை கோயில் அருகே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடையதாக வெள்ளக்கோவில், காமராஜபுரத்தைச் சேர்ந்த பிரபாகர் (32),  செம்மான்டபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (29) மூலனூர்,  தொட்டம்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் (27),  வெள்ளக்கோவில், பாரதி நகரைச் சேர்ந்த தமிழ்செல்வன் (எ ) சதீஸ் (28),  வெள்ளக்கோவில்,  ஓரம்புபாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (26), வெள்ளக்கோவில், சுந்தராண்டிவலசை சேர்ந்த நந்தகுமார் (30), மூலனூர், தொட்டம் பாளையத்தைச் சேர்ந்த பலசுப்பிரமணி (30) என 7 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் தினேஷ் என்பவர் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகியாக இருப்பதும்,  அவரது தந்தையும் அதிமுக நிர்வாகியாக பொறுப்பு வகிப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.  அதனைத் தொடர்ந்து சிக்கிய 7 பேரையும் போலீசார் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

வள்ளியூர் புனித பாத்திமா தேவாலயத்தில் கொடியேற்றம்!

Web Editor

நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு – நீதிபதி அல்லி உத்தரவு!

Web Editor

மே-3ம் தேதி வரை கடைகளைத் திறக்க தடை : புதுச்சேரி அரசு

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading