27.8 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னையில் வெகு விமரிசையாக விநாயகர் சிலைகள் ஊர்வலாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகிறது. இதனை காண ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் குவிந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 2,554 சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வை முன்னிட்டு மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நண்பகல் 12 மணி முதல் விநாயகர் சிலையை கரைக்க பொதுமக்கள் பேரணியாக எடுத்து செல்கின்றனர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் விநாயகர் சிலைகளை பேரணியாக எடுத்து வருகின்றனர். சென்னையில் பட்டினப்பாக்கம் உட்பட நான்கு இடங்களில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை பட்டினபக்கத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து சிலைகள் கொண்டு வரப்பட்டு அணிவகுத்து நிற்கவைக்கபட்டு உள்ளன. போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் 200 மீனவ தன்னார்வலர்கள், 200 மேற்பட்ட ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க காவல்துறை மற்றும் கடற்கரை மீட்புபடை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கு கடலில் இறங்கி குளிக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட சிசிடிவி காமிராக்கள், 20 உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. 2000 மேற்பட்ட சிலைகள் இன்று காலை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு கரைக்கபட்டு வருகின்றன.

சென்னை பட்டினப்பாக்கத்தில் ஆட்டம்,பாட்டத்துடன் களைகட்டியது விநாயகர் சிலை ஊர்வலம்

ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட, 25 காவல் நிலையங்களில் அனுமதி பெறப்பட்ட 503 விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்க கொரட்டூரில் இருந்து அணிவகுத்து புறப்பட்டது. ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் 3200 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சதுரங்கப்பட்டினம் குப்பம் தழுதாழை குப்பம் வடபட்டினம் கடலூர் மீனவர் குப்பம் கடப்பாக்கம் மீனவர் குப்பம் ஆகிய 6 இடங்களில் தற்போது விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் 700 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading