முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் – தெலங்கானாவில் இன்று முதல் அமல்.!

தெலங்கானாவில் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தெலங்கானாவின் 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தெலங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள். இந்நிலையில்,தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்று தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வராக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து தெலங்கானா காங்கிரஸின் மூத்த தலைவர்களான பட்டி விக்ரமார்க்க மல்லு துணை முதலமைச்சராகவும் ,  தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  உத்தம் குமார் ரெட்டி உள்ளிட்ட 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500,  அனைத்து பெண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம்,  சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும், வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம், விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம், கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வித்யா பரோசா கார்டுகள் கல்வி (உதவித்தொகை) வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்து ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் முதற்கட்டமாக தெலங்கானாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசு சாதரண மற்றும் விரைவு பேருந்துகளில் இலவச பேருந்து பயண திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் இன்று பிற்பகல் 2மணி முதல் துவங்கி வைக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

அதிமுக சார்பில் நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைப்பு

G SaravanaKumar

கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எதுவும் மாயமாகவில்லை – தமிழக அரசு

Jeba Arul Robinson

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்போது வெளியாகும்?

Vandhana

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading