முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜியின் தந்தை கே.தவசிலிங்கம் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக திருத்தங்கல் பாலாஜிநகரில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வீட்டில் வைக்கப் பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
—- சே.அறிவுச்செல்வன்







