முன்னாள் அதிமுக அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை அவர் தலைமை செயலகத்தில் சாபாநயகர் ஜே.சி.டி. பிரபாக்கரிடம் அளித்தார்.
இந்த நிலையில் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாக்கர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “சட்டமன்றப் பேரவை விதி 21-இன் படி கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு திரு. M.R. விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி அளித்துள்ளார். என்னிடம் அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்டமன்றப் பேரவை விதி 22-இன் படி முறையாக உள்ளதால் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை எம்.எல்.ஏவும் சி.விஜபாஸ்கர் அண்மையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் மூலம் அதிமுக எம்.ல்.ஏக்களின் எண்ணிக்கை 47-லிருந்து 41 – ஆக குறைந்துள்ளது. அதே போல் தமிழ் நாட்டில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.




